urappakkam,fridge blast

ஊரப்பாக்கம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் குளிர்சாதனப்பெட்டி வெடித்து 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தின் ஆர்.ஆர். பிருந்தாவன் அபார்ட்மென்டில் வசித்துவருபவர்கள் கிரிஜா, அவரது தங்கை ராதா, தம்பி ராஜ்குமார், ராஜ்குமாரின் மனைவி பார்கவி மற்றும் அவரது மகள் ஆராதனா. கிரிஜாவின் கணவருக்கு திதி கொடுக்கவேண்டி இவர்கள் வெளிநாட்டிலிருந்து அண்மையில் இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்றிரவு இவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயம் மின்கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டி வெடித்துள்ளது. இதனால் அலறியடித்து எழுந்த அனைவரும் கூச்சலிட்டு தங்களைப் காப்பாற்றவேண்டி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளனர். ஆனால் சத்தம் கேட்டு அவர்கள் வருவதற்குள் வெடிப்பு காரணமாக வெளியான புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல் கைப்பற்றப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பார்கவி மற்றும் ஆராதனா ஆகியோர் குரோம்பேட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்