கோவை, சரவணம்பட்டி, மாணவி கொலை, சிறுமி கொலை, Coimbatore, Saravanampatti, Student murder, Girl murder

கோவையில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்டு சிறுமி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் சிறுமியின் தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பவுன் நகைக்காக கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை, சரவணம்பட்டி பகுதியில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு படித்த மாணவி நேற்று சடலமாக மீட்கப்பட்டார். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கட்டிட தொழிலில் மேஸ்திரியாக இருந்து வரும் சரவணன், வேலைக்கு செல்லும் போது அந்த மாணவியின் குடும்ப நண்பராக இருந்து வந்துள்ளார். பிறகு 3 சவரன் நகைக்காக கொலை செய்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்