
"கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் " என்று கூறிய உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என தெரிவித்தார்.
சென்னை திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கலந்து கொண்டு பேசுகையில், "கொரோனா 3-ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை.
கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அனிமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இனி அதிகரிக்கக்கூடும். கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்று கூறினார்.