pongal gift,mk stalin,tn govt

கடந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் அரசு வழங்கிய பொருட்கள் தரமாக வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்த நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு பணமாக வழங்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2000 பணம் மற்றும் பொங்கலுக்கான சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகையாக அரசு சார்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாற்றாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சென்ற ஆண்டு போல் அரசு சார்பில் பொங்கல் பரிசாக பணம் அறிவிக்கப்படாதது பெரும்பாலானோருக்கு ஏமாற்றமாகவே இருந்தது. 

இதைத்தொடர்ந்து அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. தொகுப்பில் வழங்கப்பட்டிருந்த வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படவில்லை என்றும், கடமைக்கு அரசு இவ்வாறு தரமற்ற பொருட்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு அரசு தரப்பிலிருந்து பொங்கல் பரிசாக, சமையல் பொருட்களுக்கு பதில் ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பணமாக வழங்குவது தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கும் என்பதால் அரசு இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் அரசு தரப்பிலிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்