சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை அடுத்த புழல் ஏரியில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு உபரி நீரை பொதுப்பணித்துறையினர் திறந்தனர். இன்று 90 சதவீத கொள்ளளவை புழல் ஏரி எட்டியது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் 2,916 மில்லியன் கன அடி நீர் உள்ளது. புழல் ஏரியின் 2 மதகுகள் வழியாக 2 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 1,357 கனஅடியாக உள்ளது. புழல் ஏரியில் இருந்து நேற்று முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,872 மில்லியன் கன அடி நீர் உள்ளது.
புழல் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் 13.5 கி.மீ. தூரம் சென்று எண்ணூரில் வங்கக்கடலில் கலக்குகிறது. நீர்வரத்து 1,487 கன அடியாக உள்ள நிலையில் குடி நீருக்காக 191 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் செல்லும் கால்வாய் வழியே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னையில் உள்ள முக்கிய ஏரிகள் நிரம்பி வருகின்றனர். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 58 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கொசஸ்தலை வடிநில கோட்டத்தில் உள்ள 336 இருக்கிறது. இந்த ஏரிகளில் 58 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது. மேலும் 37 ஏரிகள் 76 சதவிகிதமும், 50 ஏரிகள் 51 சதவிகிதமும், 107 ஏரிகள் 50 சதவிகிதமும், 79 ஏரிகள் 25 சதவிகிதமும் நிரம்பியிள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.
பூண்டி நீர்தேக்கத்தில் மொத்த உயரமான 35 அடியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் 33 .98 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி நீரில் தற்போது, 2 ஆயிரத்து 786 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 244 கன அடியாக உள்ள நிலையில், 4 ஆயிரத்து 883 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 138 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 88 ஏரிகள் 70 சதவீதத்துக்கு மேலும் 48 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி உள்ளது பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் தற்போது 2ஆயிரத்து 942மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 710 கன அடியாக உள்ள நிலையில், ஏரியிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 144 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில், அதன் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது, 18 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான ஆயிரத்து 81 மில்லியன் கனஅடியில், 908 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 520 கன அடியாக உள்ள நிலையில், ஆயிரத்து 200 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23 .3 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக உள்ள நிலையில், அவை முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சுற்றி உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.