ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022
'தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்க்கே கிடைக்க தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றவேண்டும்' - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டின் தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு தமிழர்களுக்குக் கிடைக்க சட்டம் இயற்றவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
"ஓசூர் அருகே அமைக்கப்பட்டு வரும் டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தவருக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இது குறித்த டாட்டா நிறுவனத்தின் விளக்கம் நிறைவளிக்கவில்லை.
 
டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மொத்தமுள்ள வேலைவாய்ப்புகள் 18,000. ஆனால்,தமிழகம் முழுவதும் அரசு சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2348 பேருக்கு மட்டுமே வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
 
டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 80% தமிழர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அந்நிறுவன நிர்வாகம் உறுதியளித்திருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்திருக்கிறார். ஆனால், அதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை.
 
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசிடம் உள்ளது. இதை தமிழக அரசே செய்ய முடியும் என்ற நிலையில், தனியார் நிறுவனங்கள் அளிக்கும் உத்தரவாதமற்ற உறுதிமொழிகளை நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
 
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்காக, தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் சட்டத்தை வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 
 
பதிவு: November 26, 2022
பேருந்துகளில் அடுத்த நிறுத்தங்களின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் தொடக்கம்! அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்!

சென்னையில் அரசுப் பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் நிறுத்தங்களின் பெயர்களை அறிவிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

மெட்ரோ இரயில்களில் அறிவிக்கப்படுவது போலவே அரசுப் பேருந்துகளிலும் அடுத்த நிறுத்தங்களின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு ஒலிபரப்பும் திட்டம் இன்று தொடங்கிவைக்கப்பட்டது. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கிவைத்தார். 

முதற்கட்டமாக சென்னையில் 150 பேருந்துகளில் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. மேலும் 500 பேருந்துகளில் அடுத்தகட்டமாகத் தொடங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்லன. 6 ஒலிபெருக்கிகள் மூலம் பயணிகளுக்கு நிறுத்தங்களின் பெயர்கள் அந்நிறுத்தங்களுக்கு 300 மீட்டர் முன்னதாக அறிவிக்கப்படும். இதன் மூலம் அடுத்த நிறுத்தங்களைத் தெரிந்துகொண்டு பயணிகள் இறங்க தயார் நிலையில் இருக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பெயர்கள் அறிவிக்கப்படும்.

சென்னை பல்லவன் மாநகரப் போக்குவரத்துக்கழக அலுவலகத்திலிருந்து இத்திட்டம் துவங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் சிவசங்கருடன் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். 

பதிவு: November 26, 2022
'கடந்த 2 ஆண்டுகளாகவே பாஜகவில் சிலரால் நான் குறிவைக்கப்பட்டேன்' - காயத்ரி ரகுராம் வேதனை!

பாஜகவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் குறிவைக்கப்பட்டதாகவும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் மக்களுக்காக பணியாற்றி அவர்களிடம் சென்றடைவேன் என்றும் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் உருக்கமாகப் பதிவிடுள்ளார்.

பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா - சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் ஆகியோர் இடையேயான ஆபாச செல்போன் உரையாடல் தமிழக பாஜகவில் அதீத புகைச்சலைக் கிளப்பிவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஆடியோ வைரலான நிலையில், அக்கட்சியின் தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம், சூர்யா சிவா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்நிலையில், கட்சியில் தான் கடந்த 2 ஆண்டுகளாகவே குறிவக்கப்படுவதாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

"என்னை வெளியேற்ற விரும்பியவர்கள், அவர்கள் விரும்பியதை அடைய நான் அவர்களுக்கு போதுமான இடத்தை அளித்துள்ளேன். ஆம்! நான் நீண்ட காலமாக சுயமாக என்னை அழித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்தேன். என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் சீதாவின் அக்னி பரீட்சையைப் போன்று பாஜக மீதான விசுவாசத்தை நிரூபிப்பதில் எனக்கு கவலையில்லை.

பாஜகவில் சுதந்திரமாக பணியாற்ற விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் குறிவைக்கப்பட்டேன், நான் தொடர்ந்து குறிவைக்கப்பட்டதால் பெரும்பாலான இரவுகளில் நான் சரியாக தூங்கவில்லை. திமுக, விசிக மற்றும் இப்போது வலதுசாரி ஆதரவாளர்களால் நான் தொடர்ந்து கேலிக், கிண்டல்களால் தாக்கப்பட்டேன்.

ட்விட்டரில் இருப்பவர்களை விட, போட்டியில் இருப்பவர்களுக்கு உண்மை தெரியும். பொறுப்பில் இருப்பவர்களுக்கு உண்மை தெரியும். இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எனது பணியின் மூலம் என்னை நிரூபித்துமக்களிடம் சென்றடைவேன். அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வேலை செய்ய அனுமதியுங்கள்.

நமது தலைசிறந்த தலைவர்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் பலர் இத்தகைய இடைவெளிகளை சந்தித்துள்ளனர். காலம் என்னை குணப்படுத்தும். இந்த நேரத்தை ஆன்மீக ரீதியிலும் ஆக்கப்பூர்வமாகவும் மக்களைச் சென்றடைய பயன்படுத்துவேன்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

பதிவு: November 24, 2022
'முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே மழைநீர் வடிகால் பணிகளைத் தாமதமாக்குகிறார்' - குஷ்பூ குற்றச்சாட்டு!

மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து சென்னை அடையாறில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய குஷ்பூ, "தமிழக அரசு வேண்டுமென்றே சென்னை மழைநீர் வடிகால் பணிகளை தாமதப்படுத்துகிறது. மழைக் காலங்களில் வெள்ளம் வரும் என்று உங்களுக்குத் தெரியும் தானே? தெரிந்திருந்தும் வெயில் காலத்திலேயே இப்பணிகளை முடிக்காமல் மழைக்காலம் வருவதற்கு சற்று முன்னதாக பணிகளைத் துவக்கியதேன்?

ஏனென்றால் அப்பொழுதுதான் பணிகளை மழையால் முடிக்கமுடியவில்லை என்று கூறி மேலும் நீட்டிக்கமுடியும். இதன் மூலம் பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பயனடைவார்கள். காதில் பூ சுத்தும் வேலையை திமுக விடவேண்டும்" என்று கூறினார். 

பதிவு: November 15, 2022
'மழை வெள்ள மீட்புப்பணிகளால் மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர்' - முதல்வர் ஸ்டாலின் சீர்காழியில் பெருமிதம்!

மழை வெள்ளத்திற்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். இதைத்தொடர்ந்து சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "நீங்கள் நினைப்பதுபோல் மக்கள் எதிர்ப்பையோ கண்டனங்களையோ ஏங்களுக்கு எதிராக தெரிவிக்கவில்லை; மாறாக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். 

தமிழகத்தில் அதிகமான பாதிப்பு மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் தான் ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே முக்கியத்துவம் கொடுத்து நானே இங்கு கிளம்பி வந்துள்ளேன். செந்தில் பாலாஜி, மெய்யநாதன், ரகுபதி ஆகிய அமைச்சர்களை அனுப்பி மழை மீட்புப்பணிகளை மேற்கொள்ளச்சொன்னேன். அவர்கள் சிறப்பாகவே செய்திருந்தும், அது போதாது என்று நானே கிளம்பி இரவே பாண்டிச்சேரி வந்து தங்கி காலை 7.30 மணிபோல் கிளம்பி அனைத்து இடங்களையும் பார்வையிட்டேன். மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். சில குறைகள் இருந்தாலும் அதையும் இன்னும் சில நாட்களுக்கும் நிவர்த்தி செய்துவிடுவோம்.

எதிர்க்கட்சிகள் எங்களை கேவலப்படுத்தவேண்டும் என்பதற்காக, விமர்சிக்கவேண்டும் என்பதற்காக இதைவைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். அதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு மக்கள் தேவை தான் முக்கியம்" இவ்வாறு தெரிவித்தார். 

பதிவு: November 14, 2022
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:

2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் மின்கட்டண ஆணை எண்.7/22. நாள் 09.09.2022-ன் படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்கும்படி பல்வேறு குறு சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

குறு சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு (Low Tension B-B) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்.

Image

பதிவு: November 09, 2022
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி! புயலாக வலுப்பெறாது என்றாலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானதாக தென்மண்டல வானிலை ஆய்வுமைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது. டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழை தொடர்ந்து குளிர்வித்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இது, வரும் நவம்பர் 12-ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் காரணமாக நவம்பர் 12-ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் 12-ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்த வரையில் நவம்பர் 10-ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழையும், 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், 13-ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றும், ஆனாலும் கனமழை தொடர்ந்து இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

பதிவு: November 09, 2022
திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்கள், பக்தர்கள் உட்பட யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்கள் உட்பட யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகராகப் பணிபுரியக் கூடிய சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், கோவில்களில் சிலை திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தடுக்க செல்போன் பயன்படுத்தத் தடை இருப்பதாகவும், ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிலைகள் முன்பாகவும், அபிஷேகம் போன்ற நேரங்களிலும் செல்போன் பயன்படுத்தப்படுவதாகவும் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில், மகாதேவன், சத்திய நாராயணன் பிரசாத் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு முன் அவர் தொடுத்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களே சிலைகளுக்கு முன் புகைப்படம், வீடியோ போன்றவற்றை எடுத்து தங்களது யூடியூப் பக்கங்களில் பதிவிடுவதாகவும் அது ஏற்புடையதல்ல என்றும் வேதனை தெரிவித்தனர்.

மேலும், "தமிழ்நாட்டிலுள்ள கோவில்கள் என்ன சத்திரமா? திருப்பதி கோவிலின் வாசல் முன்பாகக் கூட யாரும் புகைப்படங்கள் எடுக்கமுடியாது. ஆனால், தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்பு நின்று செல்பி எடுத்துக்கொள்கின்றனர். தமிழக கோவில்கள் என்ன சுற்றுலாத் தலமா? கோயிலுக்குள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீசர்ட், ஷார்ட்ஸ் போன்ற உடைகள் அணிந்துகொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கோயில்களுக்குள் அர்ச்சகர்கள், பக்தர்கள் ஆகியோர் செல்போன் கொண்டுவருவதையும், பயன்படுத்துவதையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதைக் கண்டால் அவற்றைப் பறிமுதல் செய்து திருப்பித் தரக்கூடாது" என்று கூறினர்.

இதையடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட யாரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை அனுப்புமாறு இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 

பதிவு: November 09, 2022
வெல்லம் உருகியதாக எழுந்த சர்ச்சைகள்! பொங்கல் பரிசாக பணம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்!

கடந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் அரசு வழங்கிய பொருட்கள் தரமாக வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்த நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு பணமாக வழங்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2000 பணம் மற்றும் பொங்கலுக்கான சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகையாக அரசு சார்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாற்றாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சென்ற ஆண்டு போல் அரசு சார்பில் பொங்கல் பரிசாக பணம் அறிவிக்கப்படாதது பெரும்பாலானோருக்கு ஏமாற்றமாகவே இருந்தது. 

இதைத்தொடர்ந்து அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. தொகுப்பில் வழங்கப்பட்டிருந்த வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படவில்லை என்றும், கடமைக்கு அரசு இவ்வாறு தரமற்ற பொருட்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு அரசு தரப்பிலிருந்து பொங்கல் பரிசாக, சமையல் பொருட்களுக்கு பதில் ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பணமாக வழங்குவது தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கும் என்பதால் அரசு இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் அரசு தரப்பிலிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

பதிவு: November 09, 2022
'ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்போர் ஏழைகளா? இது மோசடியின் உச்சம்' - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீமான் சீற்றம்!

முற்பட்ட வகுப்பினருக்கான 10% பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தின் மீதானப் பேரிடி என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருக்கும் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நூற்றாண்டு கால வகுப்புரிமைப் போராட்டத்தின் விளைவினால் கிடைக்கப்பெற்ற இடஒதுக்கீட்டினை முற்றாகக் குலைத்திடும் வகையில் வழங்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பென்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல!

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில், இரு நீதிபதிகள் முரண்பட்டாலும், மூன்று நீதிபதிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்ததன் விளைவாக, பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவெனும் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டதென்றாலும், இடஒதுக்கீட்டுக்கு பொருளாதாரத்தை அளவுகோலாக வைக்கும் முறைக்கெதிராக ஒரு நீதிபதிகூட முன்நிற்காதது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.

இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல! அது மண்ணின் மக்களுக்கான தார்மீக உரிமை. சாதியம் புரையோடிப்போயுள்ள இந்தியச்சமூகத்தில் எல்லாத்தரப்பு மக்களுக்கும் எல்லாவிதமான வாய்ப்புகளும் கிடைக்கப்பெறுவதில்லை.அத்தகையக் குறைபாடு கொண்ட சமூகத்தை நேர்நிறுத்தவும், சமத்துவத்தை நிலைநிறுத்தவுமான செயல்பாட்டு முறையே இடஒதுக்கீடாகும். அதுவே சாதியப்பாகுபாட்டினாலும், வருணாசிரம வேறுபாட்டினாலும் காயம்பட்ட மண்ணின் மக்களின் புண்ணை ஆற்றுகிற மாமருந்தாக அமையும்.

சாதிய ஏற்றத்தாழ்வுகளாலும், தீண்டாமைக்கொடுமைகளாலும் பெருந்துயருக்கு ஆட்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் கல்வியினாலும், வேலைவாய்ப்பினாலும், பொருளாதாரத்தினாலும் உயர்ந்தால்தான் தங்கள் மீதான சாதிய அழுத்தங்களிடமிருந்து விடுபட்டு, சமூகச்சமத்துவத்தை அடைய முடியும் என்கிற உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இடஒதுக்கீடெனும் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவ முறை உருவாக்கப்பட்டது.

பன்னெடுங்காலமாகச் சமூகத்தின் ஆழ்தளத்தில் அழுத்தி வைக்கப்பட்டு, பிறப்பின் அடிப்படையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகவே இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டதே ஒழிய, பொருளியல் பெருக்கத்துக்காக அல்ல! பொருளாதாரத்தை அளவுகோலாய் வைத்து, இடஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த முனைவதென்பது, அது உருப்பெற்றதன் நோக்கத்தையே முழுமையாகச் சிதைத்தழிக்கும் பேராபத்தாகும். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டு முறையானது வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தின் மீது விழுந்தப் பேரிடியாகும்.

இடஒதுக்கீட்டின் நோக்கம் பொருளாதார முன்னேற்றமல்ல; கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரக்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் அனைவருக்குமான இருப்பையும், பங்களிப்பையும் உறுதிசெய்வதேயாகும். அதனைச் சிதைத்து முற்பட்ட வகுப்பினருக்கு சலுகை அளித்திட முயல்வது என்பது சகிக்கவே முடியாத பெருங்கொடுமையாகும். பொருளாதாரம் என்பது மாறுதலுக்குப்பட்டது; எப்போதும் நிலையானதாக இருக்கக்கூடியதல்ல. ஆகவே, அதனை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீட்டை அளவீடு செய்வது என்பது நடைமுறை சாத்தியமற்றதும்கூட.

ஆண்டொன்றுக்கு 2.5 இலட்சம் வருமானம் ஈட்டுபவர் வருமானவரி கட்ட வேண்டுமென்று ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துவிட்டு, ஆண்டுக்கு 8 இலட்சம் சம்பாதிக்கும் முற்பட்ட வகுப்பினரை பொருளாதாரத்தில் பின்தங்கியவராக அறிவித்து, அவர்களுக்கு இடஒதுக்கீட்டில் 10 விழுக்காட்டை வாரிவழங்குவது மிகப்பெரும் மோசடித்தனமாகும். அதனை சட்டப்படுத்தி, உறுதிப்படுத்தியிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பானது வரலாற்றுப்பெருந்துயரம். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்.

ஆகவே, முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக தமிழக அரசானது உடனடியாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, வலுவான சட்டப்போராட்டம் நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டுமெனக் கோருகிறேன். இத்தோடு, 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் இணைந்துபோராடுமென அறிவிப்பு செய்கிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பதிவு: November 08, 2022
'உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது; விசிக இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்' - திருமாவளவன் அறிவிப்பு!

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அச்சமயம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும் கண்டனக்குரல்களை எழுப்பின. பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிரானது என்று கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், அவ்வழக்குகளுக்கான தீர்ப்பு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் கீழ் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்டோருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோரும், செல்லாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், ரவீந்திர பட் ஆகியோரும் தீர்ப்பு வாசித்தனர். 3:2 என்ற விகித அடிப்படையில் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பு இறுதித்தீர்ப்பாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், "பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதி கோட்பாட்டுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கும் எதிரானது. இது உச்ச அநீதி. இதனை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

பதிவு: November 07, 2022
'தமிழ்நாட்டில் மட்டும் சுவர்களுக்குள் பேரணி செய்வதா? உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்!' - ஆவேசப்படும் ஆர்.எஸ்.எஸ்.!

தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நாளை நடைபெறவிருந்த நிலையில், அதனை ரத்துசெய்வதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ளது. ஏற்கனவே அக்.02-ல் நடைபெறவிருந்த பேரணி தமிழக காவல்துறை அனுமதி மறுப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு நாளை நடைபெறவிருந்தது.

முதலாக, தமிழகத்தில் 50 இடங்களில் நாளை நடைபெறவிருந்த பேரணியை 3 இடங்களாக தமிழக காவல்துறை குறைத்தது. உளவுத்துறை தகவல்கள் அடிப்படையில் 23 இடங்களில் அனுமதி மறுத்தும், 24 இடங்களில் உள் விளையாட்டு அரங்கங்களில் பேரணியை நடத்திக்கொள்ளவும் தமிழக காவல்துறை அறிவுறுத்தியது.

இந்நிலையில், காவல்துறையின் உளவுத்துறை தகவல்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ். 44 இடங்களில் தங்களது பேரணியை நடத்திக்கொள்ளலாம் என்றும், 6 இடங்களில் அசாதாரண சூழ்நிலை கருதி தற்போதைக்கு பேரணிக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்தது. 

ஆயினும், பேரணிக்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த நிபந்தனைகளே ஆர்.எஸ்.எஸ்-க்கு தலைவலியாய் அமைந்தது. அதன்படி, சுற்றுச்சுவர்கள் சூழந்த இடங்களிலேயே ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தவேண்டும் என்றும், தெருக்கள் வழியாக பேரணி நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பேரணியின்போது பயன்படுத்தக்கூடாது என்றும், சாதி, மதம் குறித்து தேவைற்ற விதத்தில் பேசக்கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் பேரணியை நடத்தவும் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தது. இவற்றை மீறும் பட்சத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"மேற்குவங்கம், காஷ்மீர், கேரளா போன்ற மாநிலங்களில் தெருக்கள் மற்றும் வெளிப்புறங்களிலேயே அணிவகுப்பை நடத்துகிறோம். அப்படி இருக்கையில் தமிழகத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நான்கு சுவர்களுக்குள் நடத்திக்கொள்ளக் கூறுவது ஏற்புடையதல்ல. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். இதை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்" என்று இந்த விவகாரம் குறித்து ஆர்.எஸ்.எஸ். தென்மண்டல தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார். 

பதிவு: November 05, 2022
தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்திக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்திக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.02-ல் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த திட்டமிட்டிருப்பதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சமூக நல்லிணக்க பேரணி அதே தேதியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அன்றைய தினம் எந்த பேரணிக்கும் அனுமதி இல்லை என்று தமிழக காவல்துறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பேரணியை நவம்பர் 6-ல் நடத்திக்கொள்ளலாம் என்றும், அதற்கு தமிழக காவல்துறை ஏதேனும் தடை விதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் 6-ல் நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ்.பேரணியை 47 இடங்களில் நடத்த  தமிழக காவல்துறை தடை விதித்தது. இதனடிப்படையில் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 இடங்களில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். பேரணியை மேற்கொள்ள தமிழக காவல்துறை அனுமதி தந்தது.

உளவுத்துறையின் அறிக்கை அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்த நிலையில், வழக்கை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், தமிழகத்தின் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்துள்ளது.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், கன்னியாகுமரி ஆகிய ஆறு இடங்களில் நிலைமை சீராக இல்லாத காரணத்தால், இயல்புநிலை திரும்பும் வரை ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த வேண்டாம் என்றும் அதுவரை காத்திருக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பதிவு: November 04, 2022
ஊரப்பாக்கம் அருகே சோகம்! குளிர்சாதனப் பெட்டி வெடித்து 3 பேர் மூச்சுத்திணறி பலி!

ஊரப்பாக்கம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் குளிர்சாதனப்பெட்டி வெடித்து 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தின் ஆர்.ஆர். பிருந்தாவன் அபார்ட்மென்டில் வசித்துவருபவர்கள் கிரிஜா, அவரது தங்கை ராதா, தம்பி ராஜ்குமார், ராஜ்குமாரின் மனைவி பார்கவி மற்றும் அவரது மகள் ஆராதனா. கிரிஜாவின் கணவருக்கு திதி கொடுக்கவேண்டி இவர்கள் வெளிநாட்டிலிருந்து அண்மையில் இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்றிரவு இவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயம் மின்கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டி வெடித்துள்ளது. இதனால் அலறியடித்து எழுந்த அனைவரும் கூச்சலிட்டு தங்களைப் காப்பாற்றவேண்டி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளனர். ஆனால் சத்தம் கேட்டு அவர்கள் வருவதற்குள் வெடிப்பு காரணமாக வெளியான புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல் கைப்பற்றப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பார்கவி மற்றும் ஆராதனா ஆகியோர் குரோம்பேட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பதிவு: November 04, 2022
'குஜராத் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆரத்தி எடுத்த பாஜகவினர் பெண்களுக்காகப் போராட தகுதியற்றவர்கள்' - அமைச்சர் மனோ.தங்கராஜ் பாய்ச்சல்!

திமுக பிரமுகர் சைதை சாதிக் பேசியதற்கு கனிமொழி மன்னிப்பு கேட்ட பின்னரும் குஷ்பூ விளம்பரத்துக்காக அதைப் பெரிதுபடுத்துவதாக அமைச்சர் மனோ.தங்கராஜ் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக பிரமுகர் சைதை சாதிக் என்பவர் பாஜக பெண் உறுப்பினர்கள் குஷ்பூ, காயத்ரி, கௌதமி, நமீதா ஆகியோரை கொச்சையான முறையில் இழிவுபடுத்திப் பேசினார். இதற்கு தமிழக பாஜக தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக பிரமுகர் பேச்சு குறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மன்னிப்பு தெரிவித்திருந்தார். ஆனாலும் அவர் மன்னிப்பு தெரிவித்தது மட்டும் போதாது என்றும், முதல்வர் ஸ்டாலின் தனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவேண்டும் என்றும் கூறினார். மேலும் அப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ.தங்கராஜ் சைதை சாதிக் பேசியதைக் கண்டிக்காமல் அமைதி காத்ததாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து குஷ்பூ தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே அப்பிரச்சினையை பெரிதுபடுத்திவருவதாக அமைச்சர் மனோ.தங்கராஜ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "சென்னை ஆர்.கே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் பேசிய கருத்திற்கு கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்து கண்டித்தேன். பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ கழகத்திற்கோ உடன்பாடு இல்லை, ஏற்றுக் கொள்ளதக்கதல்ல. திமுக துணை பொதுச்செயலாளர் திருமிகு. கனிமொழி அவர்கள் வருத்தம் தெரிவித்த பின்னரும், தன்னை விளம்பரப்படுத்துவதற்காக திருமதி.குஷ்பூ ஏதேதோ பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனை முடிவதற்குள் பாஜக அரசால் விடுதலை ஆகி வந்தபோது குற்றவாளிகளுக்கு வரவேற்பு அளித்த பாஜக கட்சியினருக்கு பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். 

பதிவு: November 03, 2022
தமிழகத்தில் நவ.06-ல் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த பெரும்பாலான இடங்களில் மீண்டும் தடை! தமிழக காவல்துறை அதிரடி! உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன?

தமிழகத்தில் சுமார் 47 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது தமிழக காவல்துறை.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு பெரும்பாலான இடங்களில் தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அக்டோபர் 2-ல் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அனுமதி தர மறுத்தது. மேலும் அன்றைய தினம் விசிக சார்பில் நடைபெறவிருந்த சமூக நல்லிணக்க பேரணி உள்ளிட்ட அனைத்து பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விவகாரம் நீதிமன்றத்தை நாடவே ஆர்.எஸ்.எஸ். நவம்பர் 6-ல் பேரணி நடத்திக்கொள்ளலாம் என்றும், அன்றைய தினமும் காவல்துறை அனுமதி தர மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை தெரிவித்திருந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் நவம்பர் 6-ல் நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ்.பேரணியை 24 இடங்களில் நடத்த முற்றிலும் தடை விதித்தும், 23 இடங்களில் உள்விளையாட்டு அரங்குகளில் பேரணி நடத்த ஒப்புக்கொண்டால் அனுமதி வழங்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 இடங்களில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். பேரணியை மேற்கொள்ள தமிழக காவல்துறை அனுமதி தந்துள்ளது. 

உளவுத்துறையின் அறிக்கை அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஆராய்ந்து நவம்பர் 4-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பதிவு: November 02, 2022
'ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்' - தமிழக அரசு அறிவிப்பு!

ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037-வது பிறந்தநாள் சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் நாளை(நவம்பர் 3) கொண்டாடப்படவிருக்கிறது. இதனால் தஞ்சை பெரியகோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

இந்நிலையில், ராஜராஜ சோழனின் சதய விழா இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், "மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சதயவிழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும், இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

மேலும் தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தப்பட்டு பொலிவூட்டப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

பதிவு: November 02, 2022
'ட்விட்டர் வலதுசாரிக்கும் இடதுசாரிக்கும் களமாகட்டும்; ஆனால் பொய்ச்செய்திகள் வேண்டாம்' - எலான் மஸ்கை 'வசமாக' வாழ்த்திய வைரமுத்து!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளதையடுத்து பொய்ச்செய்திக்கும் மலிந்த மொழிக்கும் ட்விட்டரில் இடம் தரவேண்டாம் என்று மஸ்கிற்கு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

சமூகவலைதளமான ட்விட்டரை உலகப் பணக்காரர்களில் முக்கியமானவரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் வாங்க முன்வந்தார். ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னதாக ட்விட்டரில் போலிக்கணக்குகள் அதிகம் இருப்பதாகவும், அவற்றை அகற்றினால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகவும் கூறினார்.

பிரச்சினை நீதிமன்றம் செல்லவே அவர் இம்மாதம் 28-ம் தேதிக்குள் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அதையடுத்து அவர் ட்விட்டரை வேறுவழியின்றி தனதாக்கிக்கொண்டார். இதைத்தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்தவர்களை பணிநீக்கம் செய்தார். மேலும் பல அதிரடிகளை நிகழ்த்தவும் காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்கை வித்தியாசமான முறையில் வாழ்த்தி கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், "ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே! இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். வலதுசாரி இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும் மலிந்த மொழிக்கும் இழிந்த ரசனைக்கும் இடம்தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

பதிவு: October 29, 2022
'தீபாவளிக்கு இந்து கடைகளிலேயே பட்டாசு வாங்குங்கள்' - இந்து மக்கள் கட்சியின் சர்ச்சைப் பதிவு!

தீபாவளிக்கு பட்டாசுகளை இந்துக்கள் கடைகளிலேயே வாங்கவேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள ட்வீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

வரும் 24-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு ஆடைகள், பட்டாசுகள் வாங்குவது போன்ற முன்னேற்பாடுகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மத அடையாளங்களை மறந்து அனைவரும் தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடித்து இனிப்புகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியில் ஈடுபடுவர்.

இந்நிலையில், தீபாவளிப் பண்டிகைக்கு இந்துக்கள் கடைகளில் மட்டுமே பட்டாசுகள் வாங்கவேண்டும் என்ற சர்ச்சைக்குறிய பதிவை இந்து மக்கள் கட்சி பதிட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தீபாவளிக்கு எந்தப் பொருள் வாங்கினாலும் இந்து கடையா என்று பார்த்து வாங்கவும்; நாம் கொடுக்கின்ற ஒரு பைசா லாபம் கூட ஒரு இந்துவுக்கு தான் போய் சேர வேண்டும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

ஒரு பண்டிகை இந்து, கிறித்துவ, இஸ்லாமிய மதங்களைச் சார்ந்த பண்டிகையாக இருந்தாலும் அன்றைய தினம் அன்பையும், உணவையும் சாதி மதம் பாராமல் பரிமாரிக்கொள்வதில் தான் பண்டிகையின் சாரமே அடங்கியுள்ளது. இப்படி இருக்கையில் பிரிவினையை போதிக்கும் விதமான இப்படிப்பட்ட கருத்துகள் சமூகத்தில் தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்புபவையாக உள்ளது.

இந்து மக்கள் கட்சியின் இக்கருத்துக்கு, "பட்டாசு வாங்கவேண்டாம் என்று சொன்ன நீங்கள், இந்துக் கடைகள் தவிர்த்து மற்ற கடைகளில் அரிசு, பருப்பு, ஆடை, பெட்ரோல் வாங்கமாட்டேன், தேவையின்போது பிறரது இரத்தம் வேண்டாம், பிற மத மருத்துவர்கள் வேண்டாம் என்று கூறத் தயாரா?' என்று நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர். 

பதிவு: October 21, 2022
'உழைப்பையெல்லாம் உறிஞ்சிவிட்டு பணிநீக்கம் செய்ய முயல்வதா?' - அண்ணாமலை பல்கலை. தொகுப்பூதிய பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய சீமான் வலியுறுத்தல்!

அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டி நாதக சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்த அவரது அறிக்கையில், 

"சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களைத் திடீரெனப் பணி நீக்கம் செய்ய முயலும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவு வன்மையான கண்டனத்திற்குரியது. மிகக்குறைந்த ஊதியம் வழங்கி அவர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டுத் தற்போது பணியிலிருந்து நீக்க முயல்வது அவர்களது வாழ்வாதாரத்தை நசித்து அழிக்கும் கொடுஞ்செயலாகும்.

2010-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 205 தற்காலிக ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியுடன், ரூ.1500 என்ற மிகக்குறைந்த ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், 2013-ஆம் ஆண்டு நிதிச்சிக்கல் மற்றும் நிர்வாக முறைகேடுகளைக் காரணம் காட்டி அண்ணாமலைப் பல்கலைகழகத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தத் தொடங்கியதால் பணி நிரந்தர உறுதிமொழியானது காற்றில் பறக்கவிடப்பட்டது. இதனால் கடந்த 12 ஆண்டுகாலமாகத் தொகுப்பூதிய பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.

கடந்த மே மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்கள், காலி இடங்களைப பொறுத்து, படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் அக்டோபர் மாதத்துடன் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறியிருப்பது தொகுப்பூதிய பணியாளர்களிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகமானது தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்படுகிறதோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதியப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை என்பது, வழக்கம்போல் இதுவும் வெற்று ஏமாற்று வாக்குறுதிதானோ? என்று எண்ணவும் தோன்றுகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காது அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்கள் 205 பேரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். மேலும், ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, ஈட்டிய விடுப்புத்தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத்தொகை மற்றும் கடந்த 10 ஆண்டுகாலமாக அனைத்துவகை ஊழியர்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிவுயர்வு ஆகியவற்றையும் உடனடியாக வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

பதிவு: October 21, 2022
தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ இரயில் இயக்க நேரத்தில் மாற்றம்! முழு விபரம் உள்ளே!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ இரயில் இயக்க நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம், பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பயணச்சீட்டுகளில் சலுகைகள் வழங்குவது, இரயில் இயக்க நேரங்களை நீட்டிப்பது மற்றும் இடைவெளியை அதிகரிப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ இரயில் இயக்க நேரங்களில் மாற்றம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் தனது அறிவிப்பில், "தீபாவளியை முன்னிட்டு நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று நாட்கள் மட்டும், 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும்.

எனவே 2022 அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலான நெரிசலமிகு நேரங்களில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட கூடுதல் மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் 20.10.2022 (வியாழன்), 21.10.2022 (வெள்ளிக்கிழமை) மற்றும் 22.10.2022 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மட்டுமே" இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

பதிவு: October 20, 2022
'தமிழர்கள் தங்கள் சாதியின் பெயரை வெளியில் சொல்வது அவமானம் என்று எண்ணும் நிலையை அடைந்துள்ளதே திராவிடத்தின் சாதனை' - கனிமொழி எம்.பி.!

தமிழர்கள் தங்கள் சாதியின் பெயரை வெளியில் சொல்வது அவமானம் என்று எண்ணும் நிலையை அடைந்துள்ளதே திராவிடத்தின் சாதனை என்று கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். 

சென்னை தியாகராய நகர் பகுதியில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நடைபெற்ற விழாவில், திமுக எம்.பியும், துணைப்பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டார். இந்நிலையில் விழாவில் பேசிய அவர், "தற்சமயம் நாம் சமூகநீதியின் மற்றொரு பரிணாமத்தில் இருக்கிறோம். பிற மாநிலங்களில், அவர்களின் பெயரைக் கேட்டால் சாதியின் பெயரை இணைத்து தான் சொல்வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படியல்ல.

இங்கு ஒருவரின் பெயரை மட்டும் வைத்து சாதியை முடிவுசெய்ய முடியாது. தமிழர்கள் வெளிமாநிலங்களில் வேலைசெய்யச் சென்று அங்கு நம் பெயரைக் கேட்டால் அவர்களால் நாம் இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. தமிழர் என்று மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த அளவிற்கு நாம் சாதியை விட்டு அகன்று வந்திருக்கிறோம். இந்தப் பெருமை திராவிட இயக்கங்களையே சாரும். தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரைப் போடும் வழக்கத்தை ஒழித்தது திராவிட இயக்கங்கள் தான். சமூக நிதியைப் பற்றி வெறுமனே பேசாமல் அதற்கான கட்டுமானங்களை திராவிட இயக்கங்கள் உருவாக்கிவருகின்றன. 

சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட வாய்ப்புகள் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் வழங்கப்படவேண்டும். இடஒதுக்கீட்டால் நன்றாகப் படிப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்று தொடர்ந்து மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். உண்மையான மெரிட் என்பதன் பொருள் எல்லாருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதே. அந்த உண்மையான மெரிட்டை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. 

திராவிட கழகமே மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க மதிய சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தியது. காமராஜர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றியவர் கலைஞர் கருணாநிதி. அதன் பிறகே நாடு முழுவதும் மதிய உணவு திட்டம் பரவியது. அதைத் தொடர்ந்து, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தளபதி ஸ்டாலினால் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது" 

 

பதிவு: October 19, 2022
'அக்காவை தாய்போல் இருந்து பராமரித்து வந்துள்ளேன்; நான் அவரது ஆஞ்சியோ சிகிச்சையைத் தடுப்பேனா?' - சசிகலா அளித்துள்ள விளக்கம்!

 

தன்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட நினைத்து ஆறுமுகசாமி ஆணையம் தன் மீது பழிபோடுவதாகவும், ஆஞ்சியோ சிகிச்சையை வேண்டாம் என்று தடுக்க தான் ஒன்றும் மருத்துவர் இல்லை என்றும் சசிகலா வேதனை பொங்கத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

"என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை. என்றைக்கு நான் அம்மா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்று ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம். அது இந்த நொடிவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப்பற்றி கவலைப்பட்டு இருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்கு சாதித்து இருக்கமுடியாது. ஆனால் அதே சமயம் என் அக்கா, நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக அவருடைய மரணத்தையே அரசியலாக்கியவர்கள் கழகத்திற்கு எதிரானவர்கள், கழகத்தை அழிக்க நினைந்தவர்கள், குறிப்பாக திமுகவினர் நம் அம்மா அவர்களின் பெயருக்கும் புழுக்கும் களங்கம் ஏற்படுத்த நினைத்தது, நிறைவேறியது. அதற்கு நம் கட்சியினரே பலிகடா ஆனார்கள் என்பது தான் வேதனையான ஒன்று.

என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம் அதற்கு அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது, தானும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் என்றைக்கும் நல்ல சகோதரிகளாக, நட்பிற்கு இலக்கணமாகவே வாழ்ந்தோம். இதை இறைவன் இப்பிறவியில் எனக்களித்த பெரும் வரமாக எண்ணுகிறேன்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.

தற்போது, இவர்கள் பங்குக்கு என்னை விசாரிப்பதாக சொல்கிறார்கள். எத்தனை முறை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அம்மா அவர்கள் மரணத்தைப் பற்றி விசாரித்து கொண்டே இருக்கலாம். ஆனால், உண்மை என்றைக்கும் மாறாது. நம் அம்மாவின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் கிடையாது. அம்மா அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளித்து நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில், தூரதிஷ்டவசமாக நம்மையெல்லாம் நிர்கதியாக விட்டுச் சென்றார் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்த எதார்த்தத்தை கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விதத்தையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்தது. உச்ச நீதிமன்றம் கூட இந்த விவகாரத்தில் 19.11. 2021 அன்று ஒரு தெளிவான உத்தரவை வழங்கியிருக்கிறது.

அதாவது ஆணையத்தின் முன்பாக இருக்கின்ற சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு கொடுத்து இருந்தது. ஆனால் இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகாரவரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்த ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

நானும் அம்மாவும் கிட்டத்தட்ட சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவரும் பெறாமைப்படும் அளவுக்கு ஒருவருக்கொருவர் துணையாக ஒரே வீட்டில் வாழ்ந்து இருக்கிறோம். புரட்சித்தலைவி அம்மா அவர்களே தெரிவித்தது போல் உற்ற சகோதரியாக உயிர்த் தோழியா, இன்னும் சொல்லப்போனால் அவருக்கு தாயாக இருந்து பாதுகாத்து வந்துள்ளேன்.

என்னையும் அம்மா அவர்களையும் எப்படியாவது பிரிந்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அம்மாவும் நானும் சிறிது காலம் பிரிந்து இருந்து என்ன நடக்கிறது என்று பார்த்தோம். இந்த சதியின் பின்னணி குறித்து நாங்கள் தெரித்து கொண்டவுடன் மீண்டும் அம்மாவோடு இருந்து வந்தேன். 2012 முதல் அம்மாவுக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும்? யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொன்னது? இறந்துபோன புரட்சித்தலைவி அம்மா அவர்களும் இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. 

அப்படி இருக்கும் போது இப்படி ஒரு பொய்யான அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன அதன் உள்நோக்கம் என்ன, இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் புரட்சித்தலைவி அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நாள் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பதிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள்.

என்னுடைய நோக்கமெல்லாம் அக்காவுக்கு முதல் தர சிகிச்சை தர வேண்டும் என்பது தான், என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்பல்லோ மருத்துவமனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மருந்துவமனை, உலக அளவில் சிறப்புகளை பெற்ற மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்கள் அங்கே பணியாற்றுகிறார்கள். மேலும் அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை ஏற்கனவே அதே மருத்துவமனையில் செய்து இருந்தோம்.

இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மா அவர்களை சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம். வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அன்றைய குழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை என்று AIIMS டாக்டர்கள் உட்பட அனைத்து டாக்டர்களும் முடிவு எடுத்தார்கள். ஆனால் ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள் எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்

நம் அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள் அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை யாரும் இனிமேல் ஆதரிக்கமாட்டார்கள். பொதுமக்களும் அம்மா அவர்கள் மரணத்தில் எந்தவித சர்ச்சைகளும் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.

நம் தலைவர்களின் பெயரையும் புகழையும் யாராலும் அவ்வளவு எளிதில் அழித்து விடமுடியாது நான் இருக்கின்றவகை, இந்த மனித இனம் இருக்கின்றவரை நம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோர் பெயர் இப்பூவுலகில் நிலைத்து நிற்கும் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்"

பதிவு: October 19, 2022
'இனி இந்தியைத் திணித்தால் டெல்லியில் போராட்டம் வெடிக்கும்; 2024 தேர்தலில் பாஜகவை ஓட ஓட விரட்டுவோம்' - உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்!

மத்திய அரசு தொடர்ந்து இந்தியை திணிக்குமேயானால் டெல்லியில் போராட்டம் செய்வோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ள 11-வது அறிக்கையில், இந்தியாவிலுள்ள மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி சில பரிந்துரைகளை அளித்துள்ளது.

அதன்படி ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம் உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாயப் பயிற்று மொழியாக்க வேண்டுமெனவும், மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில்தான் நடத்தப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மத்திய அரசு இந்தி மொழித் திணிப்பை நிறுத்தவேண்டும் என்று தமிழகத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குரல்கொடுத்தன. இந்நிலையில், மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் காஞ்சிபுரம், விருதுநகர், வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஒன்றியம்னு சொன்னாதான் அவங்களுக்கு கோபம் வரும். நாம் அதையே சொல்லுவோம். ஒன்றிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே. தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சி இல்லை. இப்போது முதல் அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ.பன்னீ்ர செல்வமோ இல்லை. தமிழ்நாட்டை ஆண்டு கொண்டு முதலமைச்சராக இருப்பவர் எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

திமுகவின் முக்கிய கொள்கைளில் ஒன்று இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்பது தான். இதனை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொடர்ந்து எதிர்ப்போம். இந்தி தெரியாது போடா என உங்களிடம் சொல்லி கொண்டேதான் இருப்போம். இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறாமல் இருப்பது ஒன்றிய அரசின் கைகளில் தான் உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு, இந்த போராட்டம் ஒரு தொடக்கமாக இருக்கும். மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம்; 2019 தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் ஓட ஓட விரட்டுவோம்" இவ்வாறு கூறினார். 

பதிவு: October 15, 2022
'சத்யாவைக் கொன்ற சதீஷை பொறுமையாக விசாரிக்காமல் இப்பொழுதே இரயிலில் தள்ளிவிட்டு தண்டியுங்கள்' - விஜய் ஆண்டனி ஆவேச ட்வீட்!

மாணவி சத்யாவைக் கொன்ற சதீஷையும் இரயிலில் தள்ளிவிட்டு தண்டிக்கவேண்டும் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ட்விட்டரில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். 

பரங்கிமலை இரயில் நிலையத்தில், காதல் விவகாரம் தொடர்பாக சத்யா என்ற மாணவியை மின்சார இரயிலில் தள்ளிவிட்டு சதீஷ் என்ற இளைஞர் கொலை செய்தது தமிழகமெங்கும் கடும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

பள்ளிக்காலத்திலிருந்தே இருவரும் காதலித்ததும், திடீரென இருவரும் பிரிந்த நிலையில், சத்யாவிற்கு அவரது வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்ப்பதைக் கேள்விப்பட்டு சதீஷ் இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சத்யாவின் தந்தை மாணிக்கம், மகள் இறந்த துக்கம் தாளாமல் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு மேலும் அதிர்ச்சியைக் கிளப்பியது. தகவலறிந்து நெஞ்சுவலியால் துடித்த மாணிக்கம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பால் அவர் இறந்ததாகக் கருதப்பட்ட நிலையில், விசாரணைக்குப்பின்னரே அவர் துக்கம் தாங்காமல் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தப்பியோடிய சதீஷ் துரைப்பாக்கம் அருகே நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிரது. 

இதனிடையே, சதீஷையும் சத்யாவைப்போல் இரயிலில் தள்ளிவிட்டு தண்டிக்கவேண்டும் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆவேசமாக ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். இதுகுறித்து அவர், "சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

பதிவு: October 14, 2022
மாணவி சத்யா கொலை - மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட தந்தை, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாரடைப்பால் அவரது தந்தை உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்துவருபவர் சதீஷ். அதே பகுதியில் வசித்துவருபவர் மாணவி சத்யா. இவர்கள் இருவரும் பள்ளிக்காலத்திலிருந்தே காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் சத்யாவிற்கு அவரது வீட்டில் வேறு ஒருவருடம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தான், கல்லூரிக்குச் செல்ல வழக்கம் போல் பரங்கிமலை இரயில் நிலையத்திற்கு மாணவி சத்யா வந்துள்ளார். அங்கு வந்த சதீஷ் மற்றும் சத்யா இடையே காதல், நிச்சயிக்கப்பட்ட திருமணம் குறித்த வாக்குவாதம் முற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை நோக்கி வந்துகொண்டிருந்த மின்சார இரயில் முன்பாக சத்யாவைப் பிடித்துத் தள்ளியுள்ளார்.

விழுந்த சத்யா மீது மின்சார இரயில் ஏறியதில் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். இதனைக் கண்ட பயணிகள் அலறியடித்தவாறு அங்குமிங்கும் சிதறவே யாருக்கும் சிக்காமல் கொலை செய்த சதீஷ் அங்கிருந்து கணநேரத்தில் தப்பித்து ஓடியுள்ளார்.

இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வந்து தண்டவாளங்கள் மீது கிடந்த சத்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தப்பியோடிய சதீஷைப் பிடிக்க 7 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையும் நடைபெற்றுவந்தது. 

இந்நிலையில் துரைப்பாக்கம் அருகே நேற்று நள்ளிரவில் சதீஷ் காவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். மேலும், மகள் இறந்த தகவலறிந்த சத்யாவின் தந்தை அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்குப்பின், புதிய திருப்பமாக, அவர் மகள் இறந்த துக்கத்தால் மதுவில் விஷம் கலந்து அருந்தியதும், அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவலர்கள் தொடர்ந்து இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

2016-ல் இதேபோன்ற காதல் விவகாரத்தால் சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் ராம்குமார் என்ற இளைஞரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சத்யா கொலை வரை தொடரும் இதுபோன்ற நிகழ்வுகள் சமூகத்தில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. 

பதிவு: October 14, 2022
'பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள பேருந்து நிலைய பாலூட்டும் அறைகளை சீர்செய்திடுக' - தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை!

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பேருந்து நிலைய பாலூட்டும் அறைகள் பராமரிப்பின்றி கிடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர், 

"கழக நிறுவனர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் காலம் தொட்டே அஇஅதிமுக பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த, 2015-ஆம் ஆண்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்கென்று பாலூட்டும் தனி அறைகள் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்களுக்கான இத்திட்டம் இந்த விடியா ஆட்சியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. தமிழகமெங்கும் பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை எந்தவித பராமரிப்பின்றியும் இருக்கைகள் சேதமடைந்த நிலையிலும், துர்நாற்றம் வீசும் அவல நிலையிலும் மூடிக் கிடக்கிறது.

இந்நிலை மாறவேண்டும். தாய்மார்கள் போற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை உடனடியாக சீர்செய்து, மீண்டும் தாய்மார்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

பதிவு: October 13, 2022

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்