பள்ளிக்கு அடையாளங்களுடன் கூடிய கயிறுகள் அணிந்துவரக்கூடாது, பிறந்தநாள் நிகழ்வுகளின்போதும் பள்ளிச் சீருடையில்தான் பள்ளிகளுக்கு வரவேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை மாணவர்களுக்கு விதித்துள்ளது சமூகநலத்துறை!
அரசு சார்பில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நன்னெறிப்பண்புகள்!
விதிமுறைகள்
1. மாணவ மாணவியர்கள் தினமும் பள்ளி சீருடையை சுத்தமாக அணிய வேண்டும்.
2. தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும்.
3. கைகால் நகங்களை சுத்தமாக வெட்ட வேண்டும் மற்றும் தலை முடி சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்.
4. காலில் காலணி அணிய வேண்டும்.
5. மாணவர்கள் 'டக் இன்' செய்யும் போது சீருடை வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.
6. பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டும்.
7. பள்ளிக்கு செல்லும் போது அடையாள அட்டை அணிய வேண்டும்
8. பிறந்த நாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வரவேண்டும்.
9. மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை.
10. வகுப்பறையில் பாடங்களை கவனமாக கவனிக்க வேண்டும்.
11. ஆசிரியர் பேச்சை மாணவர்கள் கேட்க வேண்டும்.
12. மாணவ மாணவியர்கள் சீருடையில் பள்ளிக்கு வரும்போது கூடுதலாக கலர் டிரஸ் எடுத்து வரக்கூடாது.
13. வகுப்பில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
14. அடிக்கடி கை, கால்கள் கழுவ வேண்டும்.
15. மாணவர்கள் எங்கு சென்றாலும் வரிசையாக செல்லவும்.
16. மாணவ மாணவியர்கள் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது மற்றும் எந்தவொரு Tattoo போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.
17. மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லும் போது அவர்களின் சீருடை சட்டையிலுள்ள பொத்தான்களை கழட்டக்கூடாது.
18. வகுப்பறையில் நோட்டு புத்தகங்களை கிழித்தெறியக் கூடாது.
19. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது காப்பு, கம்பல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் ஏதும் அணிய கூடாது.
20. மாணவ மாணவியர்கள் P.T. வகுப்பின்போது பள்ளி வளாகத்துள்ளேயே விளையாட வேண்டும். வெளியே செல்லுதல் கூடாது.
21. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் பொது மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது.
நன்னெறிப்பண்புகள்
* மாணவ மானவியர்களிடம் கீழ்குறிப்பிட்டுள்ள பள்ளி நல்லொழுக்கக் கதைகள் எடுத்துரைத்தல்,
1. நீதிநெறி கதைகள்
2. தெனாலிராமன் கதைகள்
3. காப்பிய கதைகள்
4. நாட்டுப்பற்றை ஊட்டும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகள்
* சுத்தம் கல்வி தரும்
* மாணவ மாணவியர்களிடையே அமைதி கலாச்சாரத்தை ஊக்குவித்தல்.
* மதிப்புகளை வளர்த்தல், அணுகுமுறைகளையும் உத்திகளையும் மாணவ மாணவியர்களிடையே ஊக்குவித்தல்
* பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனான உறவுமுறைகளை மேம்படுத்துதல்.
* மாணவ மாணவியர்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
* மாணவு மாணவியர்களின் குடும்ப உறவுமுறைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.